
காலி கராப்பிட்டி வைத்தியசாலைக்கு எதிரில் உள்ள 32 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்புகளை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, நகர அபிவிருத்தி அதிகாரச் சபைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று (19.06.13) அந்த பகுதிக்கு காவற்துறையினரின் உதவியுடன் சென்ற நகர அபிவிருத்தி அதிகாரச் சபையின் அதிகாரிகளும் தொழிலாளர்களும், பலவந்தமாக குறித்த குடும்பங்கள் வசிக்கும் நிலப்பகுதியை அடையாளமிட்டு, வேலி போட்டுள்ளனர்.
இது குறித்து அங்குள்ள மக்கள் காலி நகர சபையின் அதிகாரிகளிடம் வினவிய போது, நகர அபிவிருத்தி அதிகாரச் சபைக்கு உயர் மட்டத்தில் இருந்து கிடைத்த உத்தரவிற்கு அமைய வேலி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment