
பொதுமக்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் மேர்வின் சில்வா அண்மைய நாட்களின் தனது சிறுநீரை அருந்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்திய ஆயுர்வேத வைத்தியர்களின் ஆலோசனையின் பேரிலேயே அவர் தனது சிறுநீரை அருந்தி வருவதாகக் கூறப்படுகிறது. இவர் நாளாந்தம் பல தடவைகள் சிறுநீர் அருந்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் நேற்று அமைச்சர் மேர்வின் சில்வா ஊடகவியலாளர் ஒருவருக்குக் கருத்துத் தெரிவிக்கையில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் மொராஜி தேசாயும் சிறுநீர் அருந்தியதனை நினைவூட்டியதுடன் அதனடிப்படையில் நோய் தீர்க்கும் நிவாரணியாக தானும் தனது சிறுநீரை அருந்தி வருவதாகவும் அதன் மூலம் சாதகமான தன்மைகள் காணப்படுவதாகவும் கூறினார்.
ஆனால் தான் முழுமையான சிறுநீரை மட்டும் அருந்தவில்லை எனவும் அதில் குறிப்பிட்டளவு நீரும் கலந்தே அருந்தி வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் நேற்று அமைச்சர் மேர்வின் சில்வா ஊடகவியலாளர் ஒருவருக்குக் கருத்துத் தெரிவிக்கையில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் மொராஜி தேசாயும் சிறுநீர் அருந்தியதனை நினைவூட்டியதுடன் அதனடிப்படையில் நோய் தீர்க்கும் நிவாரணியாக தானும் தனது சிறுநீரை அருந்தி வருவதாகவும் அதன் மூலம் சாதகமான தன்மைகள் காணப்படுவதாகவும் கூறினார்.
ஆனால் தான் முழுமையான சிறுநீரை மட்டும் அருந்தவில்லை எனவும் அதில் குறிப்பிட்டளவு நீரும் கலந்தே அருந்தி வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment