
ரிசானா நபீக்கை போலி ஆவணங்கள் மூலம் சவுதிக்கு அனுப்பியதாகக் கூறப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் தற்போது வேறு ஒரு பெயரில் பதிவு செய்ய முற்பட்டபோது கண்டு பிடிக்கப்பட்டதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
சவூதியில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பணிப் பெண்ணை அனுப்பிய குறித்த முகவர் நிறுவனம் இரு வேறுபெயர்களில் செயற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை அடுத்து அது தொடர்பில் ஆராய்வதாக குறிப்பிட்ட அமைச்சர் டிலான் பெரேரா தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
மேற்படி தகவல்களை சிங்கள ஊடகமொன்றும்வெளியிட்டுள்ளது.
0 comments :
Post a Comment