பத்தரமுல்ல நீதியமைச்சின் ஆய்வு கூடத்திற்கு அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் விஜயம்.

லங்கையில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த உதவியளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

பத்தரமுல்லவில் அமைந்துள்ள நீதியமைச்சின் ஆய்வு கூடத்திற்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் விஜயம் செய்துள்ளார்.

அமெரிக்காவின் உதவியுடன் இந்த நவீன ஆய்வு கட்டடம் நிர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த அமெரிக்கா முனைப்புடன் செயற்பட்டு வருகின்றமை இந்த உதவியின் மூலம் நிரூபணமாகியுள்ளதாக அமெரிக்கத் தூதுவர் சிசன் தெரிவித்துள்ளார்.

இரசாயன பகுப்பாய்வு உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றத் துறையின் மேம்பாட்டுக்கு தேவையான வசதிகளை இந்த ஆய்வு கூடம் கொண்டமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :