கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட மாணவி உயிரிழப்பு பரீட்சைகள் ஒத்துவைப்பு.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட மாணவி உயிரிழந்துள்ளார்.

21 வயதான குறித்த மாணவி இன்று காலை உயிரிழந்ததாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் கூறினார்.

இதேவேளை, கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலை, முகாமைத்துவம் மற்றும் சட்ட பீடங்களுக்கான விரிவுரைகளும் பரீட்சைகளும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நுளம்பு பெருகும் இடங்களை சுத்தப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் குமார ஹிரிம்புரேகம தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தின் சட்ட பீடக் கட்டடத்தில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்த பீடத்தை தற்காலிகமாக மூடுமாறு கொழும்பு மாநகர சபை நேற்று முன்தினம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.N1st
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :