ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்டக் குழு கூட்டம் இன்று தாருஸ்ஸலாமில் .


ன்று மாலை கட்சி தலைமையகத்தில் இக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

குறிப்பாக 13வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

13வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நாட்டில் எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு விடை பெறும் வகையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

13வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் அதற்கான கட்சியின் எதிர்ப்பை அரசிற்கு அறிவிப்பதற்கான நடைமுறைகள் குறித்து இதன்போது பேசப்படவுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :