சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டில் ஜனாதிபதி இன்று கலந்துகொள்வார்-

ந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தன்சானியா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இன்று சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டில் பங்குபற்றவுள்ளார்.
தன்சானியாவின் தார் ஸ் சலாம் நகரில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
பல்வேறு நாடுகளின் அரச தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்குபற்றவுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க கூறியுள்ளார்.
நவீன உலகில் தொழில்நுட்ப போக்குவரத்து தொடர்பாடல் துறைகளின் முன்னேற்றத்தை அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் பயன்படுத்துவது தொடர்பில் இன்றைய மாநாட்டில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி நேற்று தன்சானியா ஜனாதிபதியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :