நாட்டின் பல்வேறு பகுதிளில் 23 பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்த ஆசாமி கைது.

நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 23 பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்த நபரொருவரை அவரால் பாதிக்கப்பட்ட சிலர் பிடித்து பத்தேகம பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

இவர் பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்து அதனூடாக குறித்த பெண்களை தொடர்புகொண்டுள்ளார்.

குறித்த நபர் இதுமட்டுமன்றி பலரை ஏமாற்றி பணமோசடியும் செய்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அம்பேகம, அம்பல சந்தியில் வைத்து குறித்த நபர் சிலரிடம் பணம் வசூலித்துக்கொண்டிருக்கும்போது கரந்தெனிய மற்றும் அம்பேகம வாசிகள் சிலர் அவரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

இவர் பிடிபட்ட வேளையில் இவரிடம் போலி அடையாள அட்டைகள், திருமண சான்றிதழ்கள் சிலவற்றையும் கண்டுபிடித்துள்ளனர்.

விசாரணைகளிலுருந்து அவருக்கு 48 வயதெனவும், சுமார் 23 பேரை அவர் திருமணம் செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தான் திருமணம் செய்த பெண்கள் சிலரிடமிருந்து சொத்துக்களையும் இவர் எழுதி வாங்கியுள்ளதுடன், இவர் மொத்தம் 50 இலட்சத்துக்கும் அதிகமான தொகையை அவர்களிடமிருந்து பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :