கிழக்கு மாகாண சபையின் இன்றைய சபை அமர்வை 20 உறுப்பினர்கள் பகிஷ்கரிப்பு.


கிழக்கு மாகாண சபையின் இன்றைய சபை அமர்வை ஆளும் தரப்பு உறுப்பினர்கள் 20 பேரும் பகிஷ்கரித்துள்ளனர்.

கிழக்கு மாகாண சபையின் இம்மாதத்திற்கான பொதுச் சபைக் கூட்டம் தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது.

இதன்போது முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மாத்திரமே ஆளும் தரப்பு சார்பில் சமூகமைத்திருந்தார்.

கிழக்கு மாகாண சபையின் ஏனைய நான்கு அமைச்சர்களும் ஆளும் தரப்பு உறுப்பினர்களும் இதில் கலந்து கொள்ளாமல் பகிஷ்கரித்துள்ளனர்.

கிழக்கு மாகாண சபையின் அதிகாரங்களில் ஆளுநர் மேலான்மை செலுத்தி வருகிறார். அரச உயர்மட்டத்தில் முறையிட்டும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. 

இந்த இழுபறியைக் கண்டித்தே ஆளும் தரப்பு உறுப்பினர்களான நாம் அனைவரும் இன்றைய சபை அமர்வை பகிஷ்கரித்துள்ளோம் என மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கறுப்புப்பட்டி அணிந்து பங்கேற்றுள்ளனர்.

13ஆம் அரசமைப்புத் திருத்தச் சட்டத்தில் கைவைத்து மாகாண சபை அதிகாரங்களை பிடுங்குவதற்கு எடுக்கப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளைக் கண்டித்தே இக்கூட்டத்தில் கறுப்புப்பட்டி அணிந்து பங்கேற்றுள்ளோம் என எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபாணி அறிவித்துள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :