துமிந்த சில்வா இன்று (19) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டார்.

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று (19) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டுள்ளார்.

கொலன்னாவை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின்போது தலையில் காயமடைந்து பாதிக்கப்பட்ட நிலையில் துமிந்த சில்வாவுக்கு கடந்த 18 மாதங்களாக பாராளுமன்ற விசேட விடுமுறை வழங்கப்பட்டது.

2011ஆம் ஆண்டு ஒக்டோபர் 8ஆம் திகதி இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்டதன் பின்னர் துமிந்த சில்வா இன்று (19) பாராளுமன்றத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் சட்டவிரோத கூட்டத்தில் அங்கத்துவம் பெற்றமை போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :