இந்தியாவின் வட பிராந்திய மாநிலங்களில் வெள்ள அனர்த்தங்களில் உயிரிளந்தோர் 160


ந்தியாவின் வட பிராந்திய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160ஆக உயர்வடைந்துள்ளது.

டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வட பிராந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாகக் கடும் மழை பெய்து வருகின்றது.

கங்கை, யமுனை, மண்டோதரி உள்ளிட்ட ஆறுகள் எப்போதும் இல்லாத அளவிற்கு பெருக்கெடுத்துள்ளதால் ஆற்று ஓரங்களில் காணப்பட்ட குடியிருப்புக்கள் மற்றும் ஆற்றுப் பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் மூன்று நாட்களுக்கும் அதிகமாக மண் சரிவில் சிக்கியிருந்த மாநில முதலமைச்சர் வீரபத்திர சிங், 60 மணிநேர போராட்டத்திற்குப் பின்னர் நேற்று மீட்கப்பட்டதாக சன் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உத்தரகண்டில் கேதாரநாத் மற்றும் பத்ரிநாத் உள்ளிட்ட பகுதிகளில் சிக்கியுள்ள 70,000ற்கும் அதிகமான பக்தர்களை இராணுவத்தினர் ஹெலிகொப்டர் மூலம் மீட்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :