போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பெயர்களைப் பதிவு செய்யவும்-அமைச்சர் மைத்திரிபால

டக்கு, மத்தி, வட மேல் மாகாண சபை தேர்தல்களில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் ஜூலை மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் தமது பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு அக்கட்சி அறிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்ப படிவங்களை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமைக காரியாலயத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என அக் கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இத் தேர்தல்களுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக ஏழு பேர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபாலடி சில்வா, சுசில் பிரேமஜயந்த, டளஸ் அழகப்பெரும, டபிள்யூ.டீ.ஜெ.செனவிரத்ன, ரவூப் ஹக்கீம் மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இக்குழுவின் இடம்பெற்றுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :