
நிதி நிறுவனமொன்றுக்கு மாதாந்த தவணைக் கட்டணத்தை (பினான்ஸ்) செலுத்தத் தவறிய முச்சக்கர வண்டியொன்றின் உரிமையாளரை மடக்கி அவரிடமிருந்து பினான்ஸ் கம்பனி அதிகாரிகள் வண்டியை எடுத்துச் சென்றனர்.
இதனை நோட்டமிட்டுக் கொண்டிருந்த இளைஞர் கோஷ்டியொன்று வாகனத்தை கொள்ளையர்கள்தான் அபகரித்துச் செல்கின்றார்கள் என நினைத்து மற்றொரு வாகனத்தில் துரத்திச் சென்று பிடித்தனர்.
அதிகாரிகளை கடுமையாக தாக்கிய இளைஞர் குழு அவர்களிடமிருந்த 5 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் கையடக்க தொலைபேசி ஒன்றையும் அபகரித்துக்கொண்டு மாயமாய் மறைந்து விட்டனர்.
இச்சம்பவம் முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேவாசி என்னுமிடத்தில் இடம்பெற்றது.
தாக்குதலுக்குள்ளான பொ. சீனிவாசன் என்ற பினான்ஸ் கம்பனி அதிகாரி கடுமையான காயங்களுடன் சிலாபம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட முச்சக்கர வண்டியையும், சந்தேக நபர்களையும் தேடி முந்தல் பொலிஸார் வலை விரித்துள்ளனர்.
0 comments :
Post a Comment