முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை பெளத்த தேரர்கள் கைவிட வேண்டும்-தலாய் லாமா

லங்கையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை பெளத்த தேரர்கள் கைவிட வேண்டும் என திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா கோரிக்கை விடுத்துள்ளார்.

மியான்மார் மற்றும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்தப்பட்டுள்ள வன்முறைகளுக்கு பௌத்தர்களும் பெளத்த பிக்குகளுமே காரணம் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தற்போது அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, நோபல் பரிசு பெற்ற பெளத்த தேரரான தலாய் லாமா மெர்ரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் 15,000 பேருக்கு மத்தியில் நேற்றிரவு உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மதத்தின் பெயரில் நடந்துள்ள இந்த வன்முறை, நினைத்து பார்க்க முடியாத வருத்தத்தை தருவதாகவும் புத்த மத்தினர் இந்த வன்முறையில் இணைத்து பேசப்படுவது மிகவும் துரதிருஷ்டவசமானதெனவும் அவர்கள் புத்தரின் அகிம்சை வழியை கடைபிடிக்க வேண்டும் எனவும் தலாய் லாமா கூறியுள்ளார்.

மேலும் உலக முழுமைக்கும் ஒரே மனித குலம் படைக்கும் பொறுப்பு இளைஞர்களிடத்தில் இருக்கிறது என்று தலாய் லாமா தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :