வெள்ளவத்தை விகாரை லேனை அண்மித்து காலி வீதியில் நேற்று முன்தினம் இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மூவரில் இருவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு (05.04.13) வௌ்ளவத்தை காலி வீதியில் மஞ்சள் கோட்டினால் வீதியினை கடக்க முயன்ற மூவரை கார் மோதியமையினால் இவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 29 வயதுடைய பாலசூரியன் வாரணி என்ற பெண் உயிரிழந்தார். 16 வயதுடைய ஜீவன் ஜனனி, 13 வயதுடைய ஜீவன் ஜனன் ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் யுவதியின் நிலை கவலைக்கிடமாகி அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இருவர் இறந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மூன்றாவது நபரான 13 வயதுடைய ஜீவன் ஜனன் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இவர்களது உடல்கள் சுவிஸ் நாட்டுக்கு எடுத்துச்செல்லபடவுள்ளது. தற்போது கல்கிசை மகிந்த மலர்சாலையில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.TCNN
0 comments :
Post a Comment