இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானியா கவலை.

ர்வதேசத்தின் கோரிக்கைகளை தொடர்ந்தும் இலங்கை உதாசீனம் செய்தால் விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என பிரித்தானியாவின் பிரதிப் பிரதமர் நிக் கெலக் தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார். 

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிமோன் ஹக்ஸ் பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை விவகாரம் தொடர்பில் சர்ச்சைகள் நிலவி வரும் தருணத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் டேவிட் கமரூன் பங்கேற்பது சர்ச்சைக்குரியது என்பதனை ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பல பரிந்துரைகள் இதுவரையில் அமுல்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாற்றுச் சிந்தனையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளை தொடர்ந்தும் உதாசீனம் செய்தால் மோசமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடக் கூடுமென பிரதிப் பிரதமர் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் கொள்கைகள் கோட்பாடுகள் பற்றி பேசுவது மட்டும் போதுமானதல்ல அவை அமுல்படுத்தப்படுகின்றனவா என்பது கண்காணிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :