வடக்கில் தேர்தல் இடம்பெற்றால் அரசாங்கத்திலிருந்து விலகுவதாக சொல்லும் விமல் வீரவன்ச, இப்போதே தனது பதவியிலிருந்து விலக முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாணசபை உறுப்பினர் கே.வேலாயுதம் தெரிவித்தார்.
வட மாகாண சபைக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில், வடக்கில் தேர்தல் இடம்பெற்றால், தான் அரசாங்கத்திலிருந்து விலகுவதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போதும் அரசாங்கத்திலேயே வீரவன்ச இருப்பதாக கே.வேலாயுதம் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று (13) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment