சரத் பொன்சேகாவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி) வாக்குமூலம்.


முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள் ளனர்.

இராணுவத்தலைமையகத்தில் வைத்து 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கோட்டே மத்தியம்பலத்திலுள்ள சரத்பொன்சேகாவின் அலுவலகத்தில் வைத்தே குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

விடுதலைப்புலிகளின் பெண் தற்கொலை குண்டுதாரியினால் 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி இராணுவத்தலைமைய கத்திற்குள் வைத்து நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதுடன் 27 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :