கிரிக்கெட் சூதாட்டத்தில் கைதான ஸ்ரீசாந்துக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்து வந்தனர். செப்டம்பர் மாதம் திருமணம் நடக்க இருந்தது.
இது பற்றி ஸ்ரீசாந்த் தனது நண்பர்களிடம் கூறி வந்தார். தற்போது கிரிக்கெட் சூதாட்டம், அழகிகளுடன் உல்லாசம் என தகவல் வெளியாகி இருப்பதால் அவரது திருமணம் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது பற்றி ஸ்ரீசாந்த் மைத்துனர் மது பாலகிருஷ்ணன் கூறுகையில்,ஸ்ரீசாந்த் பெயரை கெடுக்க நடந்த சதியால் அவர் சூதாட்ட விவகாரத்தில் சிக்கியுள்ளார். இதனால் அவரது திருமண வாழ்க்கை பாதிக்கப்படாது என்றார்.
ஸ்ரீசாந்த் குடும்பத்தினரிடம் கேட்டபோது, திருமண ஏற்பாடு நடந்தது. ஆனால் உறுதி செய்யப்படவில்லை. மலையாளம் அல்லாத ஒரு பெண்ணைப் பார்த்தோம். ஆனால் முடிவு செய்யவில்லை. இனி என்ன நடக்கும் என்பது தெரியாது என்று கூறினார்கள்.
மணப் பெண் பெயரை அவர்கள் வெளியிடவில்லை. அவர் கேரளப்பெண் இல்லை என்று தெரிவித்தனர். ஆனால் சில வருடங்களுக்கு முன் ஸ்ரீசாந்த் பத்தனம் திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்யப்போவதாக பேச்சுக்கள் அடிபட்டமை குறிப்பிடத்தக்கது.
இது பற்றி ஸ்ரீசாந்த் தனது நண்பர்களிடம் கூறி வந்தார். தற்போது கிரிக்கெட் சூதாட்டம், அழகிகளுடன் உல்லாசம் என தகவல் வெளியாகி இருப்பதால் அவரது திருமணம் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது பற்றி ஸ்ரீசாந்த் மைத்துனர் மது பாலகிருஷ்ணன் கூறுகையில்,ஸ்ரீசாந்த் பெயரை கெடுக்க நடந்த சதியால் அவர் சூதாட்ட விவகாரத்தில் சிக்கியுள்ளார். இதனால் அவரது திருமண வாழ்க்கை பாதிக்கப்படாது என்றார்.
ஸ்ரீசாந்த் குடும்பத்தினரிடம் கேட்டபோது, திருமண ஏற்பாடு நடந்தது. ஆனால் உறுதி செய்யப்படவில்லை. மலையாளம் அல்லாத ஒரு பெண்ணைப் பார்த்தோம். ஆனால் முடிவு செய்யவில்லை. இனி என்ன நடக்கும் என்பது தெரியாது என்று கூறினார்கள்.
மணப் பெண் பெயரை அவர்கள் வெளியிடவில்லை. அவர் கேரளப்பெண் இல்லை என்று தெரிவித்தனர். ஆனால் சில வருடங்களுக்கு முன் ஸ்ரீசாந்த் பத்தனம் திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்யப்போவதாக பேச்சுக்கள் அடிபட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment