உம்றாச் செல்வதாகப் போலியான பதிவுகளுடன் சவூதிக்கு பயணிக்க வந்த இரு பெண்கள் கைது.


உம்றா யாத்­திரை செல்­வ­தாகக் கூறி சட்­ட­வி­ரோ­த­மான முறையில் சவூதி அரே­பி­யா­விற்கு வேலை வாய்ப்­புக்­காக செல்ல முற்­பட்ட இரு முஸ்லிம் யுவதிகளை நேற்று முன்­தினம் விமான நிலை­யத்தில் வைத்து வெளி­நாட்டு வேலை வாய்ப்பு பணி­யக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வாழைச்­சேனை பிர­தே­சத்தைச் சேர்ந்த 22 மற்றும் 24 வய­தை­யு­டைய இரு யுவதிகளே இவ்­வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

போலி­யான வயதை சமர்­பித்து உப முக­வர்­க­ளி­னூ­டாக பதி­வுகள் மேற்­கொள்­ள­பட்டு உம்ரா யாத்­தி­ரைக்குச் செல்­வ­தாக இஹ்ராம் ஆடை­யுடன் விமான நிலை­யத்­துக்கு வருகை தந்­த­போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில்வெளி­நாட்டு வேலை­வாய்ப்புப் பணி­யகம் ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

25 வய­துக்கு குறைந்த எவ­ருக்கும் வேலை வாய்ப்பு பணி­ய­கத்தின் பயிற்சி நெறியில் கலந்து கொள்ள முடி­யாது. இவ்­வா­றா­ன­தொரு சந்­தர்ப்­பத்தில் இவர்கள் பயிற்சி நெறியை மேற்­கொள்­ளாமல் போலி அனு­மதிப் பத்­தி­ரத்­துடன் துணை முகவர் நிறு­வ­னத்­தி­னூ­டாக சவூதி அரே­பியா செல்ல முற்­பட்­டனர். இது தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாகும்.

இதே­வேளை, வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணியகத்தின் விசேட விசா­ரணைப் பிரி­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட தேடு­தலின் பிர­காரம் இவ்­வ­ருடம் ஜன­வரி முதல் ஏப்ரல் மாதம்­வரை சட்­ட­வி­ரோ­த­மான முறையில் வெளி­நாடு செல்ல முற்­பட்­ட­வர்கள் மற்றும் 34 முகவர் நிறு­வ­னங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. அதே­போன்று சென்ற வருடம் இக்­காலப் பகு­தியில் சுமார் 77 பேர் கைது செய்­யப்­பட்­டனர். 2012 ஆம் ஆண்டு ஜன­வரி முதல் பெப்­ர­வரி வரை 14 பேரும் இவ்­வ­ருடம் 28 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்­நி­லையில் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் வெளி­நா­டு­க­ளுக்கு செல்ல முயற்­சிப்­ப­வர்­க­ளுக்கு தரா­தரம் பார்க்­காமல் தண்­டனை வழங்க தாம் பணி­ய­கத்­துக்கு உத்­த­ர­விட்­டுள்­ள­தாக அமைச்சர் டிலான் பெரேரா தெரி­வித்­துள்ளார்.VV
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :