தேசிய அடையாள அட்டைகள், இன்னும் பல பத்திரம்கள் போலியாக தயாரித்த மூவர் கைது.


போலி ஆவணங்களைத் தயாரித்த மூவர் கண்டி, தித்தவெல மற்றும் கட்டுகஸ்தோட்டை பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய அடையாள அட்டைகள், திருமண அத்தாட்சிப் பத்திரங்கள் மற்றும் கல்விச் சான்றிதழ்களை சந்தேகநபர்கள் போலியாகத் தயாரித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களுடைய போலி இரப்பர் முத்திரைகளும் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, போலி சான்றிதழ்களைத் தயாரித்து தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் போலி ஆவணங்களை அச்சிடுவதற்குப் பயன்படுத்திய உபகரணங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆட்பதிவு திணைக்களத்திடம் போலி ஆவணங்களை சமர்ப்பித்து அவர் பலருக்கு தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொடுத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.N1st
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :