மதவாச்சியில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு.


தவாச்சியில் பெண்ணொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்தமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் சடலம் மதவாச்சி பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணற்றுக்குள்ளிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர் சில தினங்களுக்கு முன்னர் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இவர் வீட்டில் தனித்து வசித்து வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நீதவான் விசாரணைகளை அடுத்து சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :