கொழும்பு துறைமுக களஞ்சிய சாலையில் தீ விபத்து பலகோடு நஷ்டம்.


கொழும்பு துறைமுகத்திலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் இன்று (24) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக துறைமுக அதிகாரசபை தலைவர் தெரிவித்தார்.

இன்று (24) அதிகாலை ஒரு மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக துறைமுக மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் ரோகித்த அபேகுணவர்தன குறிப்பிட்டார்.

துறைமுக தீயணைப்பு பிரிவினர், கடற்படை, கொழும்பு நகர சபை மற்றும் இராணுவத்தினர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் துரித விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரோகித்த அபேகுணவர்தன கூறினார்.

தீ விபத்து ஏற்பட்ட சரக்கு களஞ்சிய பகுதியில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தொடர்பிலான நடவடிக்கைகளை இன்றைய தினத்துக்குள் எடுக்கவுள்ளதாக துறைமுக அதிகாரசபை தலைவர் பியந் பந்து விக்ரம தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :