வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட அனைவருக்கும் வாக்களர் பதிவு- அமைச்சர் ஹக்கீம்

யுத்த சூழ்நிலையில் வெளியேற்றப்பட்ட அல்லது இடம்பெயர்ந்த மக்கள் தமது பூர்வீக வதிவிடங்களில் வாக்களிப்பதற்கு வகைசெய்யும் விதத்தில் வாக்காளர் பதிவு விஷேட ஏற்பாடுகள் சட்டத்தை நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் வியாழக்கிழமை (9) அங்கீகாரத்திற்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கின்றார்.

இதனூடாக, முன்னர் வாழ்ந்து வந்த தமது பூர்வீக வதிவிடத்தில் வாக்காளர்கள் என்ற அஸ்தஸ்தை பெற்று, தங்களது பிரதிநிதிளை ஜனநாயத் தேர்தல்களின் மூலம் தெரிவு செய்யும் வாய்ப்பை சட்ட ரீதியாக பெறுவதோடு, பல்வேறு அவசியத் தேவைகளுக்காக தமது இருப்பை அங்கு உறுதிசெய்யும் சந்தர்ப்பத்தையும் பெறுவார்கள்.

அசாதாரண சூழ்நிலைகளில் வெளியேற்றப்பட்ட அல்லது தகுந்த காரணங்களோடு இடம்பெயர்ந்த மக்கள் இதுவரை காலமும் எதிர்நோக்கிய வாக்குரிமைகள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு இந்தச் சட்டம் உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பது இலங்கைத் தேர்தல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க திருப்பமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :