இன்று பாராளுமன்றத்தில் 13வது அரசியலமைப்பை ரத்துச் செய்யக்கோரும் பிரேரணை.

13வது அரசியலமைப்பை ரத்துச் செய்யக்கோரும் பிரேரணையை ஜாதிக ஹெல உறுமய இன்று பாராளுமன்ற செயலாளரிடம் கையளிக்கவுள்ளது. 13வது அரசியல் யாப்பு திருத்த சட்டம் இலங்கையின் பிரதேச ஒருமைக்கும் இறைமைக்கும் கௌரவத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறியே ஜாதிக ஹெல உறுமய பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளது.

எனினும் ஜாதிக ஹெல உறுமயவின் கோரிக்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று இலங்கையின் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.அவ்வாறான ஒரு தீர்மானத்தை நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் மாத்திரமே மேற்கொள்ள முடியும் என்று ஜனாதிபதியின் எண்ணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :