ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் புத்தளத்தில் மக்கள் சந்திப்பு.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியாமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் புத்தளத்தில் வாழும் வடமாகாண முஸ்லிம்கள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர் . இந்த கலந்துரையாடல்இன்று புத்தளம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் அரசாங்க அதிபர் பெர்ணான்டோவுடன் இடம்பெற்றது .

இச்சந்திப்பில் வடமாகாண முஸ்லிம்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் அவற்றுக்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக வடமாகான தேர்தல் இடம்பெறப் போகும் நிலையில் அது தொடர்பாக ஆவணங்களை வடமாகாண முஸ்லிம்கள் இலகுவாக பெற்றுகொள்வதை உறுதிப் படுத்தும் முகமாக இந்த சந்திப்பு இடம்பெற்றது .

2009 மே மாதம் இறுதிக்கு முன்னர் இடம்பெயர்ந்து தற்போது வெளிமாவட்டங்களில் வதியும் முஸ்லிம் மக்கள் தமது வாக்காளர் பதிவினை தங்கள் விரும்பும் மாவட்டத்தில் பதிவது தொடர்பாகவும் அக்கூட்டத்தில் பேசப்பட்டது.

இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலீப் பாவா பாறூக், கட்சி முக்கியஸ்தர்களும் புத்தளம் மேலதிக அரசாங்க அதிபர் சந்திரசிறி பண்டார, புத்தளம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுர அபேயவிக்கிரம, புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம் மலீக் மற்றும் சமூக தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :