சமூக ஊடகங்களில் ஒழுக்கக் கோவையின் முக்கியத்தும்' விரைவில் கிழக்கில்


(எம்.பைஷல் இஸ்மாயில்)

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்காக 'சமூக ஊடகங்களில் ஒழுக்கக் கோவையின் முக்கியத்தும்' எனும் தலைப்பில் இருநாள் வதிவிட செயலமர்வொன்றை நடாத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த செயலமர்வில் திருகோணமலை, மட்டக்கப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ச
மூக ஊடகங்களில் ஈடுபடும் தமிழ், முஸ்லிம் ஊடவியலாளர்களை ஒன்றினைத்து நடாத்தும் இந்த செயலமர்வில் விரிவுரை நிகழ்த்துவதற்காக இலங்கையில் தலைசிறந்த விரிவுரையாளர்களினால் தமிழ் மொழி மூலம் விரிவுரைகள் மேற்கொள்ளப்படவுள்ள இச்செயலமர்வு எதிர்வரும் மே மாத இறுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இச்செயலமர்வில் கலந்துகொள்ள விரும்பும் திருகோணமலை, மட்டக்கப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சமூக ஊடகங்களில் ஈடுபடும் தமிழ், முஸ்லிம் ஊடவியலாளர்கள் தங்களின் சுய விபரக்கோவையினை எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறும் கோரப்பட்டுள்ளனர்.

விண்ணப்பங்களை தபால் மூலமாகவும் அல்லது மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பி வைக்க முடியும். தபால் மூலம் அனுப்புவதாயின் பயிற்சி இணைப்பாளர், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், A-3 - 1/1, மெனிங் டவுன், எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு – 8. (Programme Coordinator, Sri Lanka Muslim Media Forum, A3-1/1, Manning Town Flats, Elvitigala Mawatha, Colombo – 8.) என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது muslimmediaforumShgmail.com, rifthy.aliShgmail.com  ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :