அமெரிக்கா சென்ற பொதுபல சேனாவினரை உடனே வெளியேற உத்தரவிட்ட விஹாரை நிருவாகம்.


மெரிக்கா சென்றிருக்கும் பொதுபல சேனா உறுப்பினர்கள் கலிபோர்னியாவில் அமைந்திருக்கும் பெளத்த விகாரையில் தங்கியிருப்பதில் அதிருப்தியடைந்திருக்கும் விஹாரை நிர்வாகம் தமது நிலைப்பாட்டை விளக்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில் குறிப்பிட்ட விஹாரையில் அவர்களுக்கு தங்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை என்றும், குறிப்பிட்ட தேரர் ஒருவரே இந்த ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார் என்றும், விஹாரையில் பொதுபல சேனா உறுப்பினர்கள் தங்குவதை நிர்வாகம் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்களை உடனடியாக வெளியேற்றும்படியும், அவர்களை வைத்து பூஜைகள் எதையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் எனவும் அறிவித்துள்ளதாக பொதுபல சேனாவுக்கு எதிரான பெளத்தர்கள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.JM

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :