புதுவருட விடுமுறையில் படகு சவாரியில் ஈடுபட்டவர்களில் இருவர் படகு கவிழ்ந்து விபத்க்குள்ளானதில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.இச்சம்பவம் குருநாகலை, இப்பாகமுவ, பத்தலகொட வாவியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் முஹம்மட் றிஸ்மி (39 வயது )அவரது மகன் முஹம்மட் உமர் (4 வயது ) ஆகியோராவர். படகு சவாரியில் ஈடுபட்டிருந்த ஏனைய ஆறு பேரும் உயிர் தப்பியுள்ளனர்.
கொகரல்ல பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
திடீர் மரண விசாரணை அதிகாரி மொஹம்மட் பர்சான் இதனை விபத்து மரணம் என தீர்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
.
0 comments :
Post a Comment