திங்கட்கிழமையன்று ஓட்டமாவடியைச் சேர்ந்த மாணவியொருவருடன் நான் தவறாக நடக்க முற்பட்டதாகவும் அந்த மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாகவும் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நான் காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் சத்தியம் செய்யவுள்ளேன் என காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பொருளியல் பாட ஆசிரியருமான எச்.எம்.எம்.பாக்கீர் ஆசிரியர் தெரிவித்தார்.
சகோதர இணையத்துக்கு
தொலைபேசியில் தொடர்பு கொண்டு மேற்படி தகவலை வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
அல்லாஹ்மீது ஆணையாக நான் குறித்த மாணவியை எந்த தவறான எண்ணத்துடன் எனது காரில் அழைத்துச் செல்லவில்லை எதற்காக நான் அழைத்துச் சென்றேன் என்பதை விரைவில் ஊடகங்களின் மூலம் பகிரங்க அறிக்கையாக வெளியிடவுள்ளேன் எனவும் குறிப்பிட்டார்.
அல்லாஹ்மீது ஆணையாக நான் அம் மாணவியுடன் தவறாக நடந்து கொள்ளவில்லை எனவும் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றசாட்டு தொடர்பில் காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் அழிவுச்சத்தியம் செய்யவுள்ளேன் எனவும் பாக்கீர் ஆசிரியர் தெரிவித்தார்.
என்னை திட்டமிட்டு சிலர் அவமானப்படுத்தி வருகின்றனர் எனவும் நான் ஆயிரக்கணக்கான மாணவிகளுக்கு பல ஆண்டுகாலமாக கல்வி கற்றுக் கொடுத்துள்ளேன். அதில் ஒரு மாணவியாவது என்னை மோசம் என்று இதுவரை சொல்லியுள்ளனரா என்றும் நான் கேட்க விரும்புகின்றேன் எனவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பான பூரணமான அறிக்கையை விரைவில் வெளியிடுவேன் எனவும் பாக்கீர் ஆசிரியர் மேலும் குறிப்பிட்டார்.KI
சகோதர இணையத்துக்கு
தொலைபேசியில் தொடர்பு கொண்டு மேற்படி தகவலை வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
அல்லாஹ்மீது ஆணையாக நான் குறித்த மாணவியை எந்த தவறான எண்ணத்துடன் எனது காரில் அழைத்துச் செல்லவில்லை எதற்காக நான் அழைத்துச் சென்றேன் என்பதை விரைவில் ஊடகங்களின் மூலம் பகிரங்க அறிக்கையாக வெளியிடவுள்ளேன் எனவும் குறிப்பிட்டார்.
அல்லாஹ்மீது ஆணையாக நான் அம் மாணவியுடன் தவறாக நடந்து கொள்ளவில்லை எனவும் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றசாட்டு தொடர்பில் காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் அழிவுச்சத்தியம் செய்யவுள்ளேன் எனவும் பாக்கீர் ஆசிரியர் தெரிவித்தார்.
என்னை திட்டமிட்டு சிலர் அவமானப்படுத்தி வருகின்றனர் எனவும் நான் ஆயிரக்கணக்கான மாணவிகளுக்கு பல ஆண்டுகாலமாக கல்வி கற்றுக் கொடுத்துள்ளேன். அதில் ஒரு மாணவியாவது என்னை மோசம் என்று இதுவரை சொல்லியுள்ளனரா என்றும் நான் கேட்க விரும்புகின்றேன் எனவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பான பூரணமான அறிக்கையை விரைவில் வெளியிடுவேன் எனவும் பாக்கீர் ஆசிரியர் மேலும் குறிப்பிட்டார்.KI


0 comments :
Post a Comment