சமாதானத்தை சீர்குலைக்கும் நபர்களுக்கு எதிரான உத்தேச சட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இன, மத மற்றும் குல பேதங்களை தூண்டும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார புதிய உத்தேச சட்டமொன்றை தயாரித்துள்ளார்.
இந்த சட்டமே அண்மையில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி இணக்கம் வெளியிடுவார் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
உள்ளடக்கங்களை கருத்திற் கொண்டு சட்டத்தை அனுமதிப்பது குறித்து அறிவிக்க உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளைத் தூண்டும் வகையில் எழுத்து மூலமோ அல்லது வாய் மொழி மூலமோ கருத்து வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இந்தச் சட்டம் வழிகோலும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment