தலவாக்கலை - வட்டகொட பகுதியில் கிரிக்கெட் போட்டியின்போது ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் கொலைசெய்யப்பட்டமை குறித்த விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.இரண்டு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலின்போதே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
மடகும்புர பகுதியைச் சேர்ந்த 18 வயதான சுகுமாரன் பார்த்தீப் என்ற இளைஞரே கொலைசெய்யப்பட்டுள்ளார்.
சடலம் தற்போது லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment