யாழ். தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு முன்னாள் இன்று (29) காலை 7.30 மணியளவிலிருந்து பொதுமக்கள் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வலி.வடக்கு மற்றும் வலி. கிழக்கு பகுதிகளில் பொது மக்களுக்குச் சொந்தமான காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராசா, சுமந்திரன், சிறீதரன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
இவர்களுடன் பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் சமயத் தலைவர்கள் என 1000இத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பெருந்திரளான பொலிஸாரின் பாதுகாப்புடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.





0 comments :
Post a Comment