அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா (20) சனிக்கிழமை அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம் ஹனிபா தலைமையில் நடைபெறவுள்ள இவ்விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாண அமைச்சர்கள், உறுப்பினர் ஏ.எல் எம் நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏஅன்சீல், கிழக்கு மாகாண விளையாட்டுப் பணிப்பாளர் என்.மதிவன்னன் மற்றும் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எச்.விமலசேன ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இவ்விளையாட்டு விழாவில் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற 38 வது தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஏ.ஆர்.ரஜாஸ்கான்; மற்றும் இவருக்கான ஆரம்ப பயிற்றுவிப்பாளரான அட்டாளைச்சேனை விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.தாஜுதீன் ஆகியோரும் கௌரவிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment