
மட்டக்களப்பு புணானை பகுதியில் வைத்து ஆயுதம் தாங்கிய குழு கார் ஒன்றை (26) அதிகாலை 5 மணியளவில் அபகரித்துச் சென்றுள்ளது.
இக் கார் அபகரிப்பு சம்பவம் குறித்து வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலன்னறுவை நோக்கிச் சென்று கொண்டிருந்த காத்தான்குடி பூநொச்சிமுனையில் வசிக்கும் எச்.எம். ஹசன்தீன் என்பவர் செலுத்திச் சென்ற காரே இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஹசன்தீன் என்பவர் ஒரு தனியார் வர்த்தக நிறுவனமொன்றில் விற்பனை மேற்பார்வையாளராகப் பணிபுரிவரர்.
அந்நிறுவனத்தினாலேயே குறித்த வாகனம் அந்நபருக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடத்திச்சென்றவர்களை பொலிசார் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாகவும் பிந்திக்கிடைத்த தகவல்.
0 comments :
Post a Comment