ஊருக்குள் துப்பினால் 5,000 ரூபா தண்டப்பணம் அறவிட நகராதிபதி முடிவு.

எச்சில் துப்பினால் 5,000 ரூபா தண்டப்பணம் அறவீடு !

தம்புள்ளை நகரத்திலும் பஸ்தரிப்பு நிலையத்தினுள்ளும் தொடர்ந்தும் அசுத்தமாக காணப்பட்டமைக்கு தீர்வாகவும், தம்புள்ளை நகருக்குள் சுத்தத்தை பேணவும் நகருக்குள் வெற்றிலை சாப்பிட்டு எச்சில் துப்பும் நபர்களுக்கு எதிராக 5,000 ரூபா தண்டப்பணம் நியமிக்கப் போவதாக நகராதிபதி ஜாலிய ஓபாத தெரிவித்தார்.

தம்புள்ளை நகரை பொருளாதார மற்றும் உல்லாச இடமாக அபிவிருத்தி செய்யும் போது வெற்றிலை சாப்பிடும் நபர்கள் இடத்துக்கிடம் எச்சில் துப்புவதால் நகரம் அசுத்தமாகிறது.

எனவே, ‘வெற்றிலைத் தடையை’ 2013 மார்ச் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப் படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கான சட்டதிட்டங்களை விரைவில் கொண்டுவரப்போவதாக தம்புள்ளை நகராதிபதி மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :