அன்புதாய்க்கோர் அன்பான மடல்

மகளைக்கொலை செய்த சவூதியின் உதவிகள் எதுவும் வேண்டாம் ரிசானாவின் தாய்


என் அன்புத்தாயே உங்கள் துயரில் பங்கெடுத்த இந்த உலக மக்களில் நானும் ஒருவன்,
இஸ்லாமிய சரீயா சட்டப்படி உங்கள் பிள்ளைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை தாங்கள் மனதார ஏற்றுவிட்ட்தாக ஒரு செய்தி பார்த்தேன் அதை என்னாலேயே ஏற்க முடியவில்லை உங்களால் எப்படி ஏற்க முடிந்ததோ என வியந்தேன்,
உங்கள மகள் இறக்கவில்லை உலக மக்களின் மனங்களில் வாழ்து கொண்டிருக்கிறாள் என எண்ணுகிறேன்.

இச்சம்பவம் உலகிலேயே பாரிய மாற்றத்தினை நிகழ்த்தலாம் என நான் எண்ணுகிறேன்.

அதுவெல்லாம் அவ்வாறிருக்க; பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்கள்
நாம் எல்லோரும், உயிர் போனதும், அதற்கான நட்ட ஈட்டினை அந்த அரசு தருவதும் அதனை தாங்கள் பெற்றுக்கொளவதும் அங்கீகரிக்கப்பட்ட விடயம். ஊரே கூடி அழுதாலும் உங்கள் பசி உங்களோடு மட்டுமே.

தயவு செய்து நன்கு சிந்தித்து முடிவெடுங்கள், அவன் சொல்கிறான் இவன் சொல்கிறான் என தான்தோன்றித்தனமாக முடிவெடுக்க வேண்டாம்,

“””இங்கே அப்பணத்தினை வாங்க வேண்டாம் எனச் சொல்லும் நண்பர்களே உங்களால் இத்தாயினையும் அவரது குடும்பத்தினையும் ஏற்றுக்காலமெல்லாம் காப்பாற்ற முடியுமா???

முடியாது என்பது வெளிப்படையான உண்மை/// இத்தாய் அதிக மனக்குழப்பத்திலும் எதிர்காலம் பற்றிய உணர்வில்லாமலும் பேசுவது விளங்குகிறது.
இதற்கு அறிவுள்ள எவனும் ஆதரவு வழங்கக்கூடாது. முடியுமானவரை அப்பணங்களினைப் பெற்றுக் கொடுக்க உங்களாலான உதவிகளினைச் செய்யுங்கள் நண்பர்களே///

இங்கு வீணான வாதம் வேண்டாம்///

””அற்ற குழத்து அறு நீர்ப்பறவையாகி நீங்கள் அல்லலுறும் போது யாருமே கண்டு கொள்ளமாட்டார்கள் என் அன்புதாயே///

அல்லாஹ்வின் பால் கிடைக்கும் உதவிகளினை தயவு செய்து வீணடிக்க்க வேண்டாம்

-உங்கள் பிள்ளைகளில் ஒருவன்-


முப்தா முஹம்மட்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :