அடுத்த பிரதம நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ்


பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டால் அடுத்த பிரதம நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் நியமிக்கப்படுவார் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இன்று (11) பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பிரதம நீதியரசர் மீதான குற்றப்பிரேரணை தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழு அறிக்கை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதன்போது ஜனாதிபதியால் குறித்த அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு பிரதம நீதியரசர் பதவி நீக்கம் செய்யப்பட்டால் அடுத்த பிரதம நீதியரசராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. 

இதில் முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், ஷிராணி திலகவர்த்தன, சத்யா ஹெட்டிகே ஆகியோரது பெயர்கள் முணுமுணுக்கப்படுகின்றன. 

எனினும் மொஹான் பீரிஸுக்கு குறித்த பதவியை வழங்க அதிக வாய்ப்புக்கள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதெதரண
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :