சட்டக் கல்லூரிக்கு அனுமதி பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு




2013 ஆம் ஆண்டுக்கான சட்டக் கல்லூரி கற்கை நெறிக்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களில் கொழும்பு ரோயல் அகடமியில் கற்று தெரிவான மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு, குறித்த கல்வி நிலையத்தில் இன்று இடம்பெற்றது. சட்டத்தரணி எம்.கே.எம். சஜாத் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் ரோயல் அகடமியில் கற்று சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சையில் முதலாம், இரண்டாம் மற்றும் 5 ஆம் இடங்களைப் பெற்ற மாணவிகளுடன் ரோயல் அகடமியில் கற்று சித்தியெய்திய அனைத்து மாணவர்களும் கெளரவிக்கப்பட்டனர். இக் கெளரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட சட்டத்தரணி முர்ஷித் மஹ்ரூப், கெளரவ அதிதியாக கலந்துகொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன் ஆகியோர் குறித்த மாணவர்களுக்கான நினைவுச் சின்னங்களை வழங்கி கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :