பாதிக்கப்பட்ட 90 பட்டதாரிகளையும் பட்டதாரிகள் நியமனத்தில் உள்வாங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Share on
'விடுபட்ட 2011 ஆண்டுக்கான பட்டதாரிகளின் நியமனத்தை உடன் வழங்கு', 'பட்டதாரி நியமனத்திற்குள் எங்களையும் இணைத்துக்கொள்', 'அரசே எங்களுடைய நியமனத்தை உறுதி செய்', 'பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பணிபகிஷ்கரிப்புக்கு நாங்கள் பலியா' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர். 

பல்கலைக்கழகப்  பரீட்சைப் பெறுபேறுகள் தாமதமாகி வெளியாகியதால் அம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 90 பட்டதாரிகளையும் பட்டதாரிகள் நியமனத்தில் உள்வாங்குமாறு கோரி அம்பாறை மாவட்ட பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் அமைப்பினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

அம்பாறை மாவட்டச் செயலகம் முன்பாக நடைபெற்ற இவ் ஆர்ப்பட்டாத்தில் பாதிக்கப்பட்ட பல பட்டதாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் அமைப்பின் சார்பில் கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாகிப் அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் அசங்க அபேவர்த்தனவிடம் மகஜர் ஒன்றினை கையளித்தார்.

பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நடத்திய வேலை நிறுத்தம் காரணமாக பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்தினால்  அம்பாறை மாவட்டத்தில் விடுபட்ட  பட்டதாரிகளை நியமனத்தில் உள்வாங்குமாறு இந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :