Share on
மட்டக்களப்பு நகரின் வாவிக்கரையில் உள்ள மதுபானசாலைக்குள் மதுபோதையில் இடம்பெற்ற மோதல் காரணமாக ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இரவு 8.00 மணியளவில் வாவிக்கரை வீதியில் செலான் வங்கிக்கு அருகில் உள்ள மதுபானசாலைக்குள் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆதம்லெப்பை முகமட் முஸ்தபா (48வயது ) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.
மதுபானசாலையில் மது அருந்திக் கொண்டிருந்தபோது இருவருக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தின்போது குறித்த நபர் கடுமையாக தாக்கப்பட்டு, போத்தலினால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இவர் கூலித்தொழில் செய்துவருபவர் எனவும் சம்பவம் தொடர்பில் ஒருவரை தேடிவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments :
Post a Comment