கல்முனையில் என்பியல் சத்திர சிகிச்சை கூடம் திறந்து வைப்பு!



வி.ரி. சகாதேவராஜா-
ல்முனை ஆதார வைத்தியசாலையில் நோயாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார தகவல் மையம், என்பியல் விடுதி மற்றும் என்பியல் சத்திர சிகிச்சை கூட பிரிவுகள் புதிதாக திறக்கப்பட்டு பொது மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன.

வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் இரா முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ். ஸ்ரீ சந்திர குப்தா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார்.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள், வைத்திய நிபுணர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள், வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவினர் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்து சிறப்பித்தனர்.

திறந்து வைக்கப்பட்ட நோயாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார தகவல் மையம் இலங்கையில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு பிரிவு என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

இந்த பிரிவானது வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் இரா முரளீஸ்வரனின் ஆலோசனைப்படி பிரதி பணிப்பாளர் டாக்டர் ஜெ. மதனின் வழிகாட்டலில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

*இப்பிரிவானது பின்வரும் சேவைகளை பொதுமக்களுகாக வழங்கவுள்ளது.*

* நோயாளர் பாதுகாப்பு கலாச்சாரம்

* நோயாளர் மற்றும் அவரது குடும்பத்தினரின் நோய் நிலை பற்றிய ஈடுபாடு மற்றும் ஆலோசனைகள்

* நோயாளர் சுகாதார தகவல்கள்

* நோயாளர்களின் மனகுறைகளை நிர்வகித்தல்

* நன்கொடையாளர் பாராட்டுகளை ஏற்பாடு செய்தல்

* நோயாளர்களுக்கான உதவியாளர் (by stander) ஏற்பாடு மற்றும் அவர்களுக்கான பயிற்சிகள்

* முரண்பாடுகளை தவிர்க்கும் செயறன்முறைகள்

* மரண உதவி சேவை - இலவச அமர் ஊர்தி ஏற்பாடுகள் - இறப்பு சான்றிதழ் பெறுவதற்கான
நடைமுறைகள்.

* வைத்தியசாலை நடைமுறைகள்












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :