1000 குடும்பங்களின் வயிற்றிலடிக்கும் பணி அரங்கேற்றம்! ஏறாவூர் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒருவரின் ஆதங்கம்.



ஏறாவூர் சாதிக் அகமட்-
தொழிற்சாலையின் மீது கைவைப்பது என்பது கண்டிக்கப்பட வேண்டியது.இதனால் பாதிக்கப்பட்டது 1000 குடும்பம் என்பதனை மறந்துவிட்டார்கள் கடைசியில் ஏறாவூர் மட்டும் அல்ல ரிஜித்தன்ன, காவத்தமுனை,ஓட்டமாவடி,மாவடிவேம்பு,வாழைச்சேனை,களுவங்கேணி,சந்திவெளி,செங்களடி,மயிலம்பாவடி,குடியிருப்பு,மட்டக்களப்பு,கல்லடி,காத்தாங்குடி,ஆரையம்பதி,காங்கேயனோடை போன்ற ஊர்களில் வாழும் வசதியற்ற அன்றாடம் கூலித்தொழில் செய்கின்ற அப்பா அம்மா இழந்த கணவனால் கை விடப்பட்டோர்.

பெண்கள் ஆண்கள் இளைஞர் யுவதிகள் பட்டப்படிப்பு படித்தும் வேலை கிடைக்காமல் கஸ்டப்படுவோர் போன்றவர்களுக்கு கை கொடுத்து வேலை கொடுத்து நல்ல சம்பளம் கொடுத்து அவர்களுக்கு காலை பகல் சாப்பாடு கொடுத்து பாதுகாப்பான முறை போக்குவரத்து செய்யப்பட்டு வாழ வைத்தால் இத்தனை ஊர் மற்றும் மக்களின் வயித்தில் அடித்து சிலர் குளிர்காய்கின்றார்கள்.

இன்றுடன் காலவரையின்றி மறு அறிவித்தல் வரை தொழிற்சாலை மூடப்படுகின்றது 1000 குடும்பங்களும் வேலை இன்றி தவிக்கின்றது இந்த 1000 குடும்பத்தின் வேலையின் மீதும் கை வைப்பதற்கு நீங்கள் யார் இத்தனை ஊர்களில் உள்ள வேலை இழந்தோருக்கும் உங்களால் வேலை கொடுக்க முடியுமா தொழிற்சாலையில் கை வைத்தவர்கள் அல்லாஹ்வின் முன்னிலையில் 1000 குடும்பத்திற்கும் பதில் கூறியே ஆக வேண்டும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :