ஊழியர்கள் இருவருக்கு கொரோனா! இழுத்துமூடப்பட்ட காரைதீவு பிரதேசசபை

வி.ரி.சகாதேவராஜா-

காரைதீவு பிரதேசசபை ஊழியர்கள் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து அங்குள்ள நிதி மற்றும் நிருவாகப்பிரிவுகள் உடனடியாக இழுத்துமூடப்பட்டன.

இச்சம்பவம் நேற்று(11) திங்கட்கிழமை இடம்பெற்றது.

பிரதேசசபையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரின் தந்தைக்கு இருவாரங்களுக்கு முன் தொற்றுறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் வீட்டிள்ளஏனையோர் தனிமைப்படுத்தப்படுத்தலில் வைக்கப்பட்டு பிசிஆர் சோதனை செய்யப்பட்டபோது நேற்றுமுன்தினம் அவரது மனைவிக்கும் மகனுக்கும்(ஊழியர்) தொற்று உறுதிசெய்யப்பட்டது.

அதனையடுத்து நேற்று(11) காரைதீவு பிரதேசசபையிலுள்ள தவிசாளர் கி.ஜெயசிறில் உள்ளிட்ட அனைத்து 65 ஊழியர்களுக்கும் அன்ரிஜன் சோதனை செய்யப்பட்டது. தவிசாளர் உள்ளிட்ட 64பேருக்கு நெகடிவ் அதாவது கொரோனாத் தொற்றுஇல்லை எனப் பெறுபேறு கிடைத்தது. ஒருவருக்கு பொசிட்டிவ்.

காரைதீவு சுகாதாரவைத்தியஅதிகாரி டாக்டர் தஸ்லிமா பசீர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட இச்சோதனையின்போது ஒருவருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டது. இவர் நிதிப்பிரிவில் கடமையாற்றும் நிந்தவூரைச் சேர்ந்தவர்.

அதனையடுத்து இரு பிரிவுகளும் உடனடியாக நேற்றே இழுத்துமூடப்பட்டன
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :