நியூசிலாந்து பொலீசின் உடையாக முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் அறிமுகம்!

மு
ஸ்லிம் பெண்கள் அணியும் ஹைஜாப் உடன் கூடிய போலீஸ் உடை நியூசிலாந்து போலீஸ் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம் பெண்கள் அணியும் ஹைஜாப் உடன் கூடிய போலீஸ் உடை: நியூசிலாந்து அரசு அறிமுகம்
ஹைஜாப் உடன் கூடிய போலீஸ் உடையில் செனா அலி
வெலிங்டன்:

நியூசிலாந்து நாட்டின் கிரிஸ்ட்சர்ச் மாகாணத்தில் உள்ள 2 மசூதிகளில் கடந்த ஆண்டு மார்ச் 15-ம் தேதி இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த இரண்டு மசூதிகளுக்குள்ளும்
துப்பாக்கியுடன் நுழைந்த பிரென்டன் டாரண்ட் என்ற வெள்ளை நிறவெறியை அடிப்படையாக கொண்ட நபர் தொழுகை நடத்திக்கொண்டிருந்த இஸ்லாமியர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினான்.

ஒரு மசூதியில் தாக்குதல் நடத்திவிட்டு காரில் பயணம் செய்து அடுத்த மசூதியில் தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலை தனது பேஸ்புக் பக்கத்தில் நேரலையில் பதிவிட்டு உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கினான்.

இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய நிறவெறிவாதி டாரண்டிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில் உள்ளான்.

இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து நியூசிலாந்தில் உள்ள தங்கள் சமூகத்தினருக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு அந்நாட்டு போலீஸ் துறையில் செனா அலி (30) என்ற இஸ்லாமிய பெண் இணைந்தார். அவர் தற்போது நியூசிலாந்து போலீஸ் துறையில் கான்ஸ்டெபிலாக பதவி வகிக்கிறார்.

இந்நிலையில், கிரிஸ்ட்சர்ச் மசூதி தாக்குதலை தொடர்ந்து இஸ்லாமிய மக்களுடன் நல்லுணர்வை அதிகரிக்கும் வகையில் நியூசிலாந்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நியூசிலாந்து போலீஸ் துறையில் இஸ்லாமிய பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், அத்துறையில் இஸ்லாமிய பெண்கள் அணியும் ஹைஜாப் உடன் கூடிய போலீஸ் உடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்லாமிய பெண்கள் நியூசிலாந்து போலீஸ் துறையில் அதிக அளவில் சேர வேண்டும் என்பதற்காகவும், அவர்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் ஹைஜாப் உடன் கூடிய ஆடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஹைஜாப் உடன் கூடிய ஆடையை அணித்த செனா அலி-யின் புகைப்படத்தை நியூசிலாந்து போலீஸ் துறை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :