பிரதமர் நாளை உடுநுவர விஜயம்


ஐ.ஏ. காதிர் கான்-
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளரும் உடுநுவர தேர்தல் தொகுதியின் அமைப்பாளருமாகிய ஏ.எல்.எம். பாரிஸின் வெற்றியை உறுதி செய்யும் முகமாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை (30) வியாழக்கிழமை உடுநுவர, எலமல்தெனியவுக்கு விஜயம் மேற்கொள்கிறார்.

உடுநுவர, எலமல்தெனிய பியல் வைட் பெலஸ் (PEARL WHITE PALACE) மண்டபத்தில் இடம்பெறும் பொதுக்கூட்ட நிகழ்விலும் பிரதமர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தவுள்ளார். அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு இடம்பெறும் இந்நிகழ்வில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளர்கள், மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -