களுத்துறை மாநகர சபையின் மேயர் அமீர் நசீர் கைது செய்யப்பட்டுள்ளார்.!

ஜே.எப்.காமிலா பேகம்-

ளுத்துறை மாநகர சபையின் மேயர் அமீர் நசீர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை பகுதியில் மூடப்பட்டிருந்த மைதானம் ஒன்றின் பூட்டினை உடைத்து உள்நுழைந்த குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்,

அத்துடன் களுத்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ் ஏ டி நிலந்தவும் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

கடந்த 23 ஆம் திகதி குறித்த 2 பேர் உட்பட 12 பேர் மூடப்பட்டிருந்த மைதானத்திற்குள் பிரவேசித்துள்ளதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்றைய தினம் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -