சீனாவின் இயலாமையே உலகம் முழுவதும் நடக்கும் கொரோனா படுகொலை -அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

சீனாவின் இயலாமை காரணமாகவே உலகம் முழுவதும் கொரோனா படுகொலைகளை நிகழ்த்தி வருகிறது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 93,697 பேர் இந்த வைரஸ் தொற்றால் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் கொரோனா பரவலுக்குச் சீனாதான் காரணம் எனத் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அந்த வகையில் அண்மையில் இதுகுறித்து சீனாவைக் கடுமையாக விமர்சித்துள்ள ட்ரம்ப், "கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத சீனாவின் இயலாமையால் உலகம் முழுவதும் பெரும் படுகொலைகள் நிகழ்ந்து வருகின்றன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா மீதான தவறான தகவல் மற்றும் பிரச்சார தாக்குதலுக்குப் பின்னால் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -