அதாஉல்லாவின் தேசிய காங்கிரசுடன் இணைகிறார் அட்டாளைச்சேனை பழீல் BA

ட்டாளைச்சேனை மண்ணில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை வளார்ப்பதற்கு முழுமூச்சாய் பாடுபட்ட குறிப்பாக கட்சியின் ஆரம்பம் முதல் இன்றுவரை கட்சிக்காக உழைக்கும் அட்டாளைச்சேனை மண்ணின் முதல் பட்டதாரி எஸ்.எல்.எம்.பழீல் பீஏ தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரின் கழுத்தறுப்புக்கள் ஊரில் ஓரிருவரின் இலாபத்துக்காக மத்திய குழுவாக இயங்குபவர்களின் பித்தலாட்டங்கள் போன்றவைகளினால் அதிருப்தியுற்று இன்றய காலகட்டத்தில் முஸ்லீம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வினைப் பெற்றுக்கொள்ள வியாபார அரசியலை விடுத்து சமூகத்துக்கான அரசியலை மேற்கொள்ளும் நோக்கில் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நெருங்கிய நண்பராகத் திகழும் தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவுடன் இணைந்து பயணிக்க உள்ளதாக அவரது ஆதரவு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.



குறிப்பு:

குறித்த செய்தி தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் சிரேஸ்ட உயர்பீட உறுப்பினர் எஸ்.எல்.எம்.பழீல் பீ.ஏ அவர்களை இம்போட்மிரர் செய்திப்பிரிவு தொடர்பு கொண்டு கேட்டபோது:

பதில்: இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை ஆனால் மக்களின் அபிலாசைகளுக்கு முன்னுரிமை வழங்கி அரசியல் செய்வதற்கு எண்ணியுள்ளதாக தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -