ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரின் கழுத்தறுப்புக்கள் ஊரில் ஓரிருவரின் இலாபத்துக்காக மத்திய குழுவாக இயங்குபவர்களின் பித்தலாட்டங்கள் போன்றவைகளினால் அதிருப்தியுற்று இன்றய காலகட்டத்தில் முஸ்லீம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வினைப் பெற்றுக்கொள்ள வியாபார அரசியலை விடுத்து சமூகத்துக்கான அரசியலை மேற்கொள்ளும் நோக்கில் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நெருங்கிய நண்பராகத் திகழும் தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவுடன் இணைந்து பயணிக்க உள்ளதாக அவரது ஆதரவு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
குறிப்பு:
குறித்த செய்தி தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் சிரேஸ்ட உயர்பீட உறுப்பினர் எஸ்.எல்.எம்.பழீல் பீ.ஏ அவர்களை இம்போட்மிரர் செய்திப்பிரிவு தொடர்பு கொண்டு கேட்டபோது:
பதில்: இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை ஆனால் மக்களின் அபிலாசைகளுக்கு முன்னுரிமை வழங்கி அரசியல் செய்வதற்கு எண்ணியுள்ளதாக தெரிவித்தார்.